இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வழக்கம் பெருமளவில் பரவி உள்ளது. அந்த வகையில் மும்பையை சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த கோன் ஐஸ் கிரீமில் 2 சென்டிமீட்டர் அளவுக்கு மனித விரல் இருந்துள்ளது. அதைப் பார்த்த அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, விரலை கைப்பற்றி, YUMMO என்ற ஐஸ்கிரீம் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்களே உஷார்.., அடுத்த மூன்று நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!