தமிழக பள்ளி மாணவர்களே.., இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் தற்போது அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் பல மாவட்டங்களில் கன மழை பெய்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. இதனால் அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் மாவட்டத்திற்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா டிசம்பர் 19ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனால் இந்த நாட்களில் தனியார் பள்ளிகளில் வகுப்புகள், தேர்வுகள் எதுவும் நடத்தக்கூடாது என தெரிவித்துள்ளனர். மேலும் டிசம்பர் 19 முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்திரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு டிசம்பர் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here