வரலாறு காணாத வெள்ளம்.., குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை – வனத்துறையினர் அறிவிப்பு!!

0
வரலாறு காணாத வெள்ளம்.., குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை - வனத்துறையினர் அறிவிப்பு!!
மிக் ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்வதால் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வனத்துறையினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி குற்றாலத்தில் குளிக்க தடை விதித்துள்ளது. மூன்றாவது நாளாக வனத்துறையினர் குளிக்க தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here