ஹோலி பண்டிகை காரணமாக, மாநில அரசு பள்ளிகளுக்கு ஏற்கனவே 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இதனை மேலும் ஒரு நாள் நீட்டிப்பதாக உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு :
நாடு முழுவதும் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் களை காட்டியுள்ளது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு, மக்கள் இதை கொண்டாட பெரிய அளவில் தயாராகி வருகின்றனர். அதுவும் குறிப்பாக, வட மாநில மக்களால் அதிகம் கொண்டாடப்படும், இந்தப் பண்டிகையொட்டி பல மாநில அரசுகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில், உத்திரபிரதேச அரசு இந்த பண்டிகை கொண்டாட்டங்களுக்காக அரசு பள்ளிகளுக்கு மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்திருந்தது. தற்போது இந்த விடுமுறையை மேலும் நீட்டித்து, மார்ச் 9ம் தேதியும் விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது.
அட்ரா சக்க, அரசு பெண் ஊழியர்களுக்கு நாளை முழு விடுமுறை! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!
ஏற்கனவே இம்மாநிலத்தின் தனியார் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளிகளுக்கு இந்த விடுமுறை நாட்கள் 3 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பண்டிகை காரணமாக மகாராஷ்டிராவில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.