மது பிரியர்களுக்கு ஷாக்., 5 ஆண்டுகளுக்குப் பின் உயரும் மதுபான விலை! 15 முதல் 20% உயர வாய்ப்பு!!

0
மது பிரியர்களுக்கு ஷாக்., 5 ஆண்டுகளுக்குப் பின் உயரும் மதுபான விலை! 15 முதல் 20% உயர வாய்ப்பு!!
மது பிரியர்களுக்கு ஷாக்., 5 ஆண்டுகளுக்குப் பின் உயரும் மதுபான விலை! 15 முதல் 20% உயர வாய்ப்பு!!

மாநிலம் முழுவதும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின், மதுபான விலையை வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்த்த ஹிமாச்சல் அரசு முடிவு செய்துள்ளது.

அரசு அறிவிப்பு:

ஹிமாச்சல் மாநிலத்தில், காங்கிரஸ் தலைமையிலான சுக்வீந்தர் சிங் சுகு ஆட்சி பொறுப்பேற்றார். இவர் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இதனைத் தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளுக்குப் பின் மதுபானங்கள் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன்படி மதுபான ஒப்பந்தங்களை 15 முதல் 20% வரை அதிக விலைக்கு ஏலம் விட முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். மதுபான விலையை உயர்த்தும் இந்த நடவடிக்கையால், அரசுக்கு ரூபாய் 2357 கோடி வருவாய் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

வாரே வா, பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை., மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

அரசின் இந்த புதிய கொள்கை மூலம், மது பிரியர்களுக்கு உயர்தர ஒயின் பிராண்டுகள் விற்பனைக்கு கிடைக்கும் எனவும், கள்ளச் சந்தைகளில் பதுக்கப்பட்டு மது விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். அரசின் இந்த திடீர் முடிவால் மாநில மது பிரியர்கள், பெரும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here