நடிகை குஷ்பு பாலியல் ரீதியாக துன்பப்படும் பெண்கள் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
நடிகை குஷ்பு
தமிழ் சினிமாவில் நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை குஷ்பு. பாஜக கட்சியில் உறுப்பினராக செயலாற்றி வந்த இவர் சமீபத்தில் தான் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக பதவியேற்றார். அக்கணம் முதல் பெண்களுக்கு ஏற்படும் துன்பங்கள் குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தான் 8 வயது முதல் 15 வயது வரை தந்தையால் பாலியல் ரீதியாக துன்புறுத்த பட்டேன் என்று கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இவரின் இந்த கருத்தை பலரும் விமர்சித்த நிலையில் இதற்கு குஷ்பு விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, நான் பாலியல் பற்றி கூறியதற்கு, வெட்கப்பட தேவையில்லை.
சினிமா போரடிக்குது பா, திடீரென ட்ராக்கை மாற்றிய நடிகை ஜோதிகா! என்னனு நீங்களே பாருங்க!!
அதை செய்தவர்கள் தான் வெட்கப்பட வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமின்றி பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகள் குறித்து மவுனம் சாதிக்காமல் , சமூகத்தில் பேச முன்வர வேண்டும் என்று நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ கேட்டுக் கொண்டுள்ளார்.