கோவில்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் – இந்து முன்னணியினர் நூதன போராட்டம்..!

0
கோவில்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் - இந்து முன்னணியினர் நூதன போராட்டம்..!
கோவில்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் - இந்து முன்னணியினர் நூதன போராட்டம்..!

கொரோனா பாதிப்பால் இந்து கோவில்கள் திறக்க படாத நிலையில் இந்து முன்னணியினர் கோவில்களை திறக்க கோரி குன்றக்குடி கோவில் ஒன்றில் நூதன முறை போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கொரோனா பொது முடக்கம்:

நாடு எங்கிலும் கொரோனா பாதிப்பால் பொது முடக்கம் அரசால் செயல் படுத்தப்பட்டது. அதனால் கோவில்கள், திரையரங்குகள் இன்னும் திறக்க படாத நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்த்த பட்டு உள்ளது. மத்திய அரசு ஜூன் 8 ஆம் தேதி முதல் கோவில்கள் திறக்க அனுமதி அளித்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

temple
temple

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவியல்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை. அதனால் இந்து முன்னணியினர் சார்பாக போராட்டம் நடத்த பட்டது.

நூதன போராட்டம்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் தமிழக அரசு இந்து சமய அறநிலைய துறை நிர்வாகத்தில் உள்ளது முத்துமாரியம்மன் கோவில். இந்த கோவில் மற்றும் சண்முகநாதப்பெருமாள் முன்பாக கோவில்களை திறக்க வலியுறுத்தி புதன்கிழமையான இன்று இந்து முன்னணியினர் ஒற்றை காலில் நின்று நூதன போராட்டம் நடத்தினர்.

chennai-temples
chennai-temples

இந்த போராட்டத்திற்கு இந்து முன்னணி சிவகங்கை மாவட்ட செயலாளர் அக்னி பாலா தலைமை வகித்தார். மேலும் துணை தலைவர் ஜெயபால், மாவட்ட செயலாளர் கனெக்ஷன், அஜய் மற்றும் மேலும் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here