வங்கக்கடலில் யாஸ் என்னும் புயல் உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. தற்போது இதன் எதிரொலியாக கன்னியாகுமரியில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
யாஸ் புயல்:
தற்போது கடந்த சில மாதங்களாகவே வானிலை நிலவரம் இயல்புக்கு மாறாக இருந்து வருகிறது. அதேபோல் சில வருடங்களாகவே அதிக புயல்களும் உருவாகி வருகிறது. இதனால் நாட்டில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக யாஸ் என்னும் புயல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாஸ் புயல் கரையை கடக்கும் நேரத்தில் வீசும் காற்றின் வேகம் 120 கிமீ வரை இருக்கும் அல்லது அதைவிட குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
யாஸ் புயல் எதிரொலியால், கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமரியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை வரை கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.