இந்திய ஆடவர் அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா குறித்த தகவல்கள் வெளிவராத நிலையில் தற்போது முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது ஹர்திக் பாண்டியா பெங்களூருவில் உள்ள NCAவில் தனது உடல் தகுதியை நிரூபிக்க நேற்று (பிப்ரவரி 15) முதல் பயிற்சி தொடங்கியுள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது இவர் உறுதியாக T20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் வருகை இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஒருவேளை இவர் ODI உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தால் முடிவில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
உடல் உறுப்பு தானம் செய்தால் 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!