தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் கடந்த 7ம் தேதி முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை முதலில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 11ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் தற்போது 7 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின் நாளை தான் இந்த மாவட்டங்களில் பள்ளிகள் திறக்க உள்ளனர். இதனால் அன்றைய நாளிலே தேர்வு வைக்காமல் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் தேர்வை ஒத்தி வைத்துள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். அதன்படி 11ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு 13ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றம் வருமா? வெளியான பகீர் தகவல்!!!