தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலையால் சாதாரண மக்களின் நகை வாங்கும் கனவு, கனவாகவே போய்விடும் என கலங்கிப்போய் உள்ளனர். ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 40 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இன்றைய விலை:
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் வரலாறு காணாத அளவு விலை அதிகரித்து உள்ளது. ஊரடங்கு ஆரம்ப காலத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதிக்காத காரணத்தால் நகை வியாபாரம் அடிமட்டத்திற்கு சென்றது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால் நிகழ்ச்சிகள் பல்வேறு விதிகளுடன் நடைபெற்று வருகிறது. இதனால் நகை வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கி, வர்த்தகம் பழைய நிலைக்குத் திரும்பி வருகிறது.
இந்நிலையில் அதிகரித்து வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் (22 காரட்) தங்கத்தின் விலை கிராமுக்கு 74 ரூபாய் அதிகரித்து 4,978 ரூபாய்க்கும், ஒரு சவரன் 592 ரூபாய் அதிகரித்து ரூ. 39,824 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.3.90 அதிகரித்து ரூ.70.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.