சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு – தங்கத்தின் விலை புதிய உச்சம்!!

0
Gold Jewels
Gold Jewels

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.  இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 200 ரூபாய் அதிகரித்து உள்ளதால் மக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

இன்றைய விலை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தின் மீது முதலீடு செய்த காரணத்தால் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. தற்போது கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் தொடங்கியதால், அதன் தேவை அதிகரித்து விலையும் அதிகரித்து வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Gold Purchase
Gold Purchase

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் – உளவுத்துறை எச்சரிக்கை!!

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (22 காரட்) ரூ.4,635க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ரூ. 37,080 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராம் 53.30 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரூ. 53,300 விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here