அதிரடி விலை குறைப்பில் தங்கம் – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!!

0

சென்னையில் கடந்த வாரத்தில் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை வர்த்தகத்தின் முதல் நாளான இன்று அதிரடியாக குறைந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 38 ஆயிரம் ரூபாயாக சரிந்துள்ளது. இதனால் நகை வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிலவரம்:

கொரோனா ஊரடங்கு காரணமாக பிற தொழில்துறையில் பாதிப்படைந்ததால் தங்கம், வெள்ளி போன்ற ஆபரண பொருட்கள் மீதான முதலீடு பன்மடங்கு அதிகரித்தது. இதனால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. ஆகஸ்ட் மாத மத்தியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டியது. வரலாற்றிலேயே இது தான் அதிகபட்ச விலையாகும். இது சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக வர்த்தகம் நடைபெற தொடங்கி உள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது பொதுமக்களை சற்று மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.8 குறைந்து ரூ.4,752க்கும், ஒரு சவரன் 64 ரூபாய் சரிந்து ரூ.38,016க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.70 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here