கோலிவுட் திரையில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் துருவ நட்சத்திரம் நாளை திரையில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் வெளியிட உயர்நீதிமன்றம் நிபந்தனையில் தற்காலிக தடை விதித்துள்ளது. அதாவது சிம்பு நடிப்பில் ”சூப்பர் ஸ்டார்” என்ற படத்தை இயக்க கௌதம் வாசுதேவ் மேனன் ஒப்பந்தம் போட்டு ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் 2.40 கோடி பணம் பெற்றுள்ளார்.
ஆனால் சொல்லியபடி படத்தை இயக்கி முடிக்கவில்லை. இதனால் வாங்கிய பணத்தை திரும்ப பெற்று தரும்படி ஆல் இன் பிக்சர்ஸின் பங்குதாரர் விஜய் ராகவேந்திரா உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்குள் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என நிபந்தனை விடுத்துள்ளது. மேலும் அதுவரை படத்தை வெளியிட கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அரசு ஊழியர்களே., அடுத்தது இவர்களுக்கு தான் அகவிலைப்படி உயர்வு., வெளியான முக்கிய தகவல்!!!