கடந்த ஒரு வருடமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் நிலையை பொறுத்தே கேஸ் சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் 2022 ஆம் ஆண்டு நடந்த உக்ரைன் போர் காரணமாக கேஸின் விலை அதிரடியடியாக உயர்த்தப்பட்டு ரூ.1100 வரை விற்கப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
பின் ஜூலை மாதம் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு ரூ.1068 க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஆறு மாதம் வரை கேஸ் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.கேஸ் விலைப்பற்றி எந்த தகவலும் சர்வதேச சந்தை வெளியிடவில்லை. இந்த நிலையில் நேற்று சிலிண்டர் விலை குறித்த தகவலை சர்வதேச சந்தை வெளியிட்டது.
பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(02.01.2023)-முழு விவரம் உள்ளே!
அந்த தகவலில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை இந்த மாதத்தில் இருந்து ரூ.25 அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வின் படி சென்னையில் சிலிண்டர் விலை ரூ.1916 க்கும்,சேலத்தில் ரூ.1870 க்கும் மற்றும் டெல்லியில் ரூ.1769 க்கும், மும்பையில் ரூ.1721 க்கும் ,கொல்கத்தாவில் ரூ.1870 க்கும் விற்பனை ஆகிறது. இந்த விலை ஏற்றதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.