உலகெங்கும் உள்ள தமிழர்கள் வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ம் தேதி நடைபெற இருப்பதால் வெளியூர்களில் தங்கி பணிபுரிந்து வரும் பொதுமக்கள் சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாட படையெடுத்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை 4 நாட்களுக்கு அரசு விடுமுறை என்பதால் ரயில் மற்றும் அரசு பேருந்துகளின் முன்பதிவு முழுவதுமாக நிரம்பியது. மேலும் சிறப்பு ரயில்கள் அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டு தற்போது அதிலும் முன்பதிவு நிறைவடைந்தது.
மீண்டும் உயர்ந்த கேஸ் விலை., யப்பா, இவ்வளவு கூடிருச்சா? புத்தாண்டு அதுவுமா இப்படி ஒரு ஷாக்கா?
இதனால் மக்கள் ஜனவரி 12ம் தேதிக்கு பயண முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்லும் 8 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க ஆலோசனை கூட்டம் போக்குவரத்து துறை சார்பில் நாளை நடைபெறுகிறது. மேலும் பண்டிகை தினத்தன்று போக்குவரத்து நெரிசலை குறைக்க 6 சிறப்பு பேருந்து நிலையங்களை ஏற்படுத்தவும் அரசு திட்டமிடவுள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.