இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான கவுதம் கமபீர் தனது வீட்டில் 7 ஆண்டுகளாக பணி செய்து வந்த பெண் இறந்ததால் அவருக்கு தானே இறுதிச்சடங்கு செய்த நிகழ்வு அனைவருடைய மனதையும் நெகிழ வைத்துள்ளது.
கவுதம் கம்பீர்:
இந்திய அணியில் முன்னொரு காலத்தில் முன்னணி பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்தவர் கவுதம் கம்பீர். கிழக்கு டெல்லி தொகுதி பா. ஜனதா எம்.பியாக இவர் பதவி வகித்து வருகிறார். அவரது வீட்டில் 7 வருடங்களாக சரஸ்வதி பத்ரா (வயது 49) என்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய அனைத்து மருத்துவ செலவுகளையும் கமபீர் ஏற்றுக் கொண்டிருந்தார்.
கம்பீர் இறுதிச்சடங்கு:
சிகிச்சை பலனின்றி கடந்த 21ம் தேதி அவர் உயிரிழந்தார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அந்த பெண்ணின் குடும்பத்தினரால் டெல்லியில் உள்ள கம்பீர் வீட்டிற்கு வர இயலவில்லை. அந்த பெண்ணின் உடலையும் அனுப்பி வைக்க இயலவில்லை. அந்த பெண்ணின் குடும்பத்தார் கம்பீர் இறுதிச்சடங்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். இதனால் கமபீரே அந்த பெண்ணிற்கு அவர்களது வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்து வைத்தார். இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இத்தகைய மனிதாபிமான செயலுக்கு மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி உட்பட பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |