தற்போதைய காலகட்டத்தில் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனம் ஈர்த்த ரோகித் சர்மா காலமானார். அதாவது நேற்று தனது கிரிக்கெட் அகாடமியில் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்த ரோகித் சர்மா திடீரென்று மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் மருத்துவமனைக்கு சென்றதும் சிறிது நேரத்திலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.கடந்த 2004ஆம் ஆண்டில் சர்வீஸ் அணிக்கு எதிராக ரஞ்சி கோப்பை போட்டியின் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
ISL 2024: மெரினாவில் மாஸ் காட்டிய சென்னை.. கடைசி நிமிடத்தில் எதிரணியை வீழ்த்தி அபாரம்!!