மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டு உள்ள இருக்கைகளில் உட்காரும் ஆண்களுக்கு அபராதம் விதிக்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தள ஆட்சி ஒடிசாவில் நடக்கிறது. பஸ்களில் பயணிக்கும் பெண்களில் பாதுகாப்பு குறித்து புவனேஸ்வரில், போலீஸ் கமிஷனர் தலைமையில், நகர பஸ் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பஸ்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடப்பது குறித்து பேசப்பட்டது.
எனவே இதனைத் தடுக்கும் வகையில் பஸ்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து புகார் செய்ய தனி மொபைல் எண்ணும், மேலும் பெண்களில் இருக்கையில் உட்காரும் ஆண்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |