ஈரானிய திரைப்பட இயக்குனர், பாபக் கோர்ராம்டின், இவருக்கு திருமணமாகவில்லை என்றும் மேலும் தங்களை துன்புறுத்தி வருவதாக கூறி அவரின் பெற்றோர்களே அவரை கொலைசெய்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதுகுறித்து பாபக் கோர்ராம்டினின் தந்தை கூறியதாவது, நாங்கள் எவ்ளோவோ முறை கூறியும் என் மகன் திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் என் மகன் தினமும் என்னையும் என் மனைவியும் துன்புறுத்தி கொண்டிருந்தான். எங்கள் இருவரின் உயிர் ஆபத்தில் இருந்தன. நாங்கள் ஒரு நாள் கூட பாதுகாப்பாக இருந்ததில்லை. எனவே நானும் என் மனைவியும் சேர்ந்து முடிவு செய்து அவனை கொன்றோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாபக் கோர்ராம்டினின், இவர் ஒரு திரைப்பட இயக்குனர் மற்றும் இவருக்கு வயது 47. இவர் க்ரெவிஸ் (Crevice) மற்றும் ஓத் டு யாஷர் (Oath to Yashar) உட்பட பல குறும்படங்களை தயாரித்து உள்ளார். இவரின் பெற்றோர் இவரை கௌவுரவ கொலை என்ற பெயரில் துண்டு துண்டாக வெட்டி தெஹ்ரானில் உள்ள எக்படன் என்ற நகரத்தில் உள்ள குப்பைத்தொட்டியிலும், சுட்கேஸிலும் வீசி சென்றுள்ளனர்.
போலீசார் அவரின் உடல் பாகங்களை திரட்டி தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற பிள்ளையை தாய், தந்தையரே கொன்ற சம்பவம் எல்லாருக்கும் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!