FIFA உலக கோப்பை கால்பந்து தொடரில், மொரோக்கோ அணியை வீழ்த்தி தொடர்ந்து 2வது முறையாக பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்து அசத்தியுள்ளது.
FIFA உலக கோப்பை:
FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதியில் மொரோக்கோ மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டி ஆரம்பித்த 5 வது நிமிடத்தில், பிரான்ஸ் அணியின் தியோ ஹெர்னாண்டஸ் அபாரமாக கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்து அசத்தினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து, மொரோக்கோ அணி வீரர்கள் கோல் அடிப்பதற்காக பல முறை முயற்சித்த போதும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால், மொரோக்கோ அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 0-1 என்ற கோல் கணக்கில் பின் தங்கி இருந்தது. இதனை தொடர்ந்து, ஆட்டத்தின் 2வது பாதியில், பிரான்ஸ் அணி ராண்டல் கோலோ முவானியை மாற்று வீரராக களமிறங்கியது.
நேஷனல் லீக்கில் தோல்வியை சந்திக்காத இந்தியா…, அரையிறுதிக்கு முன்னேறி அபாரம்!!
இவர் சக வீரர்களின் உதவியால், வந்த வேகத்திலயே கோல் ஒன்றை அடித்தார். இதே நிலையே கடைசி வரை தொடர்ந்தால், பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் பிரேசில் அணி இந்த சாதனையை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது