வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் அண்மைக்காலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளுடன், மத்திய அரசு 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியதன் முடிவில், உத்தரவாதங்கள் விவசாயிகளுக்கு சாதகமாக இல்லை என கூறி பரிந்துரைகளை நிராகரித்தனர்.
எனவே இன்று (பிப்.21) முதல் மீண்டும் தலைநகர் டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல உள்ளோம் என விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் பேரணியை தடுக்க சாலைகளில் கம்பி வலைகளும், இரும்பு வலைகளும், பல அடுக்கு கான்கிரீட் தடுப்புகளும் போலீசாரால் பொருத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அடேங்கப்பா.. மனித மூளையில் நியூராலிங்க் ‘சிப்’.. எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய தகவல்!!