டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி போன்ற உலகின் பிரபலமான நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க். இவர் பிரபல சமூக ஊடகங்களில் ஒன்றாக இருக்கும் ட்விட்டர் (Twitter) நிறுவனத்தை கடந்த ஆண்டு வாங்கினார். இதனை தொடர்ந்து ட்விட்டரில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். குறிப்பாக ட்விட்டர் என்ற பெயரை எக்ஸ் (X) என்று மாற்றினார். மேலும் இரண்டு சந்தாக்களை அறிமுகப்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி., அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் கூடுதலாக இயக்கம்., சாமானிய மக்கள் வரவேற்பு!!!
தற்போது இவர் நியூராலிங்க் சிப் தொடர்பாக ஓர் முக்கிய தகவலை கூறியுள்ளார். அதாவது மூளையில் சீப் பொருத்தப்பட்ட முதல் மனித நோயாளி முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அவர் எண்ணங்களை பயன்படுத்தி கணினி மவுஸை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இவரின் கருத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.