பாரதி கண்ணம்மா சீரியலின் பிரபலமான அருண் பிரசாத் போன்று போலி அக்கவுண்டின் மூலம் பலரை மர்ம நபர் ஒருவர் ஏமாற்றி வருவது குறித்து சுட்டிக்காட்டியுள்ளார் ஃபரினா அசாத். இவரது பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
போலி அக்கவுண்ட்:
தமிழில் சீரியலில் மிகவும் பிரபலமான சீரியலாக இருப்பது பாரதி கண்ணம்மா தான். பல விமர்சனங்களை தாண்டி குடும்பத்தில் நிகழும் பிரச்சனைகளையும் அருமையாக வெளிப்படுத்தி வருகிறது இந்த சீரியல். இதன் காரணமாகவே இந்த சீரியலுக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் கண்ணம்மாவும் கணவனாக வரும் அருணும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கணவனாக வரும் அருண் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சின்னத்திரை நடிகர்கள் பலரும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அவர்களை போலவே போலியான அக்கவுண்டும் வலம் வந்து கொண்டு தான் உள்ளது. ஃபரினா அசாத் தனது பக்கத்தில் அருண் பிரசாத் என்று பாரதி கண்ணம்மா சீரியலின் முன்னணி நடிகரான அருண் பிரசாத் போன்று போலி அக்கவுண்டை திட்டவட்டமாக சுட்டிக்காட்டியுள்ளார்.