பனைமரத்தில் இருந்து எடுக்கப்படும் கள் உடலில் 15 வகையான நோய்களை குணப்படுத்துகிறது என தெலுங்கானா அமைச்சர் கூறியுள்ளார்.
கள் பானம்
பனைமரத்தில் பூ பூக்கும் நேரத்தில் பனைமரத்தில் உச்சியில் பனை ஓலைகளுக்கு இடையே உருவாகும் பாளை என்ற விழுதை சரியாக சீவி அதனை மண்பாண்டத்தில் வைப்பர். பின்பு அந்த பானையில் கழுத்தில் கயிறு கட்டி அதனை மரத்தில் கட்டிவிடுவர். இதிலிருந்து உருவாவதே கள் பானம் ஆகும்.
கள்ளை அளவுக்கதிகமாக குடிக்கும்போது போதை ஏற்படுகிறது. இது புளிப்பு கலந்த சுவையில் இருக்கும். முதலில் இது ஏழைகளின் பானமாக கருதப்பட்டது. இதில் சுண்ணாம்பு கலந்து வைத்தால் அது பதநீர் ஆகிறது. பதநீரை வெயில் காலத்தில் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.
தற்போது சுதந்திர போராட்ட வீரர் சர்வாய் பாபன்னாவின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட தெலுங்கானா அமைச்சர் ஸ்ரீனிவாசா கவுட் கள்ளு குடிப்பதால் 15 வகையான நோய் குணமடைவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, பனைமரத்தில் இருந்து எடுக்கப்படும் கள் மருத்துவகுணம் நிறைந்தது. இது 15 விதமான நோயை குணப்படுத்தும். புற்று நோயை கூட குணப்படுத்த வல்லது. முன்பெல்லாம் இதனை ஏழைகளின் பணம் என்று கூறுவர். தற்போது பென்ஸ் காரில் சேர்ந்து கள் அருந்துகின்றனர். மே மாதத்தில் மது கடைகள் மூடப்பட்டாலும் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.