எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை வீட்டை விட்டுப் போனதால் கரிகாலனுக்கு தர்ஷினியை திருமணம் செய்து வைக்க குணசேகரன் முடிவு செய்கிறார். இதனால் ஈஸ்வரி தர்ஷினியை எப்படி காப்பாற்றப் போகிறோம் என்பது தெரியாமல் தவிக்கிறார். இப்படி இருக்கையில் நேற்று தர்ஷினியை தேடி ஒரு பையன் வருகிறார். அவன் யார் என்று குணசேகரன் கேட்க தர்ஷினி நான் லவ் பண்ற பையன் என்று சொல்ல குணசேகரன் அதிர்ச்சியாகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடுகாண ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் குணசேகரன் தர்ஷினியிடம் முளைச்சு 3 இல விடல உனக்கு காதல் கேக்குதா என்கிறார்.
உடனே ஜனனி முளைச்சு 3 இல விடாத உங்க பொண்ணுக்கு தான் நீங்க மாப்பிள்ளை பாத்தீங்களா என்று கேட்க குணசேகரன் கோபமாக சத்தம் போடுகிறார். பின் தர்ஷினி நான் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்கிறார். அப்போது ஜனனி நீ இந்த வீட்ல இருக்கிற ஒரு குணசேகரனுக்கு பயந்து வெளியே போற. ஆனா வெளியே இந்த மாதிரி 100 குணசேகரன் இருக்கானுங்க. அவங்கள நீ எப்படி சமாளிப்ப என்கிறார். அடுத்ததாக கரிகாலன் குடித்துவிட்டு ஞானத்தின் சட்டையை பிடித்து கதறி அழுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
Enewz Tamil WhatsApp Channel
உலகம் முழுவதும் பிரபலமான இந்த சமூக ஊடகம் திடீர் முடக்கம்., என்னாச்சு? பயனாளர்கள் கதறல்!!