நாட்டில் பட்டப்படிப்பு முடித்து தகுந்த வேலை கிடைக்காமல் அன்றாட வாழ்க்கை பயணத்திற்கு கிடைத்த வேலையை செய்யக் கூடிய நிலை உருவாகி வருகிறது. ஆனால் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பல இளைஞர்களிடையே பெருகிவரும் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டந்தோறும் படித்த இளைஞர்கள் தகுதிக்கு ஏற்றார் போல் வேலை பெற முன்னணி நிறுவனங்கள் பங்குபெறும் முகாம்கள் அமைத்து இளைஞர்கள் பயனடைந்து வருகின்றனர். இதையடுத்து 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்த ஆண், பெண் என அனைவரும் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பயிற்சியுடன் கூடிய வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு எதிராக வழக்கு., ரூ.2.71 லட்சம் வழங்க உத்தரவு! மனுதாரருக்கு அடித்த ஜாக்பாட்!!
விழுப்புரம் மாவட்டத்தில் டிசம்பர் 23 அன்று காணை ஊராட்சியிலும், டிசம்பர் 24 அன்று மயிலம் ஊராட்சியிலும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் “இளைஞர் திறன் திருவிழா” என்ற பெயரில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் பங்குபெறும் இம்முகாம் காலை 09.30 மணி முதல் மதியம் 03.30 மணி வரை நடைபெறும். இதனால் 18 முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் முகாமில் கலந்து பயன்பெற மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.