இந்தியாவில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சுனாமி, நிலநடுக்கம், திடீர் வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை அறிவிப்பை மக்களுக்கு விரைவாக தெரியப்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதன் ஒரு பகுதியாக இன்று காலை 11.30 மணி அளவில், பெரும்பாலான ஆண்ட்ராய்டு மற்றும் iOS செல்போனுக்கு சோதனை அடிப்படையில் எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டது. இது உரத்த பீப் ஒலியுடன் “Emergency alert: Extreme” என ஃபிளாஷ் செய்தி வந்ததால், பலரும் பல்வேறு கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். எனவே இந்த எச்சரிக்கை செய்தி சோதனை அடிப்படையிலே அனுப்பப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளதால், நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!