தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, வாக்காளர்களை வியக்க வைக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், 1.3 கோடி பெண்களுக்கு மூன்று ஆண்டு இலவச இணைய இணைப்புடன் கூடிய இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதற்கு தகுதியான பெண்களை தேர்வு செய்ய சில நிபந்தனைகளையும் வகுத்துள்ளனர். அதன்படி ராஜஸ்தானில் உள்ள அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள், அரசு கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகள், விதவைகள் அல்லது தனித்து வாழும் பெண்கள், 100 நாள் வேலை முடித்த குடும்ப பெண்கள் ஆகியோர்களுக்கு இத்திட்ட பலன்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
மளமளவென சரிந்த தக்காளி விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா.., இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!!!