தமிழகத்தில் மிக்ஜாம் புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பல்வேறு மாவட்ட பகுதிகளும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு, தற்போது மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று (மார்ச் 14) இரவு 08.43 மணி அளவில், ஆந்திர பிரதேசம் திருப்பதியில் இருந்து கிழக்கு, வடகிழக்கு திசையில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலநடுக்கம் 3.9 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதால், சென்னை அருகேயும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிகழ்வால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.