தமிழகத்தில் ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு சிறப்பு பயணியர் ரயில் மூலம் பயணம் செய்ய இ-பாஸ் கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தெற்கு ரயில்வே:
இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி இருந்தாலும் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று முதல் நாடு முழுவதும் தினமும் 200 சிறப்பு பயணியர் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத்தில் 4 ரயில்கள் இயக்கப்படுகிறது. இவை மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கும், கோவையில் இருந்து மயிலாடுதுறை மற்றும் காட்பாடிக்கும் செல்கின்றன. இவற்றிற்கான முன்பதிவும் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளதால் பயணியர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். முன்னதாக எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் இன்று அறிவிப்பு வெளியானதால் பலர் அவதிக்கு உள்ளாகினர். இது குறித்து தெரிவித்த தெற்கு ரயில்வே, ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்ல ஆன்லைன் மூலம் அரசின் இ-பாஸ் பெறுவது கட்டாயமான ஒன்று என கூறியுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |