அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலினா வரும் பிப்ரவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகின்றனர். குஜராத் மாநிலம் அஹமதாபாத் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி அங்குள்ள சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அவரை சிறப்பாக வரவேற்க இந்திய அரசும், குஜராத் அரசும் தீவிரமாக தயாராகி வருகிறது.
7 அடி சுவர்..!
டிரம்ப் அவர்கள் வருகையை ஒட்டி குஜராத்தில் ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசைவாரிய குடியிருப்பு பகுதிகளை மறைக்கும் வகையில் 7 அடி உயரத்திற்கு அரைகிலோ மீட்டர் தூரத்திற்கு சுவர் ஒன்றை மாநகராட்சி கட்டி வருகிறது. இது குறித்து கூறிய அதிகாரிகள் இந்த முடிவு 2 மாதத்திற்கு முன்பே எடுக்கப்பட்டதாகவும், இதற்கும் டிரம்ப் வருகைக்கும் சம்மந்தம் இல்லை எனவும் கூறினர்.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
புதுப்பொலிவு பெறும் சாலைகள்..!
டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சாலைகளில் கால்நடைகள், நாய்கள், கொசுத்தொல்லை இருக்கக்கூடாது என அதிகாரிகள் கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாலையின் இருபுறமும் உள்ள மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு பனைமரங்கள் நடப்பட்டு உள்ளன.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |