தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றினை தடுப்பதற்காக நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இதற்காக திமுக கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவர் என்று ஸ்டாலின் அறிவித்தார்.
ஸ்டாலின்:
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் வீரியத்தால் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதன் காரணமாக பல தரப்பு நடவடிக்கைகள் உடனே அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மக்களின் துயரை தவிர்க்கும் வகையில் பல நிவாரணமும் தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனால் கொரோன தடுப்பு பணிக்கான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதன் காரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உலக முழுவதுமுள்ள தமிழர் நிதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தது வந்தார். இதனை தொடர்ந்து பல தரப்பு மக்கள், சினிமா துறையினர் என பலர் தங்களால் இயன்ற தொகையினை வழங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சிறு வயது குழந்தைகளும் தங்களது சிறுசேமிப்பை கொரோனா நிவாரணத்துக்காக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
அட்சய திருதியை முன்னிட்டு சரிவை காணும் தங்கத்தின் விலை – பூரிப்படையும் நகைவிரும்பிகள்!!
அதேபோல் திமுக தரப்பில் ஏற்கனேவே முதல்வரின் கொரோனா நிதிக்கு தொகை வழங்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக முதல்வர் மேலும் ஓர் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி திமுகவின் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தை கொரோனா தடுப்பு பணிக்காக வழங்குவர் என்று அறிவித்தார். இது பல தரப்பினரிடம் பாராட்டை பெற்று வருகிறது.