தமிழகத்தில் ஊரடங்கை கடுமையாக்க முதலவர் மு க ஸ்டாலின் ஆலோசனை !!!
டிஜிபி உள்ளிட்ட காவல் உயரதிகரிகளுடன் ஊரடங்கை கடுமையாக்க்குவது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் தற்போது தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பணிகளுக்காக மட்டும் மக்கள் வெளிய வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் மட்டும் 12 மணி வரை திறந்திருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், சிலர் ஊரடங்கு உத்தரவுகளை மதிக்காமல் வெளியே சுற்றுவதாக குற்றச்சாட்டும் எழுத்து வருகிறது.
எனவே இது குறித்து நேற்று நடந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் உடனான கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் கருத்தை முதல்வர் கேட்டறிந்தார். மேலும் ஊரடங்கு உத்தரவுகளை நீக்கலாமா அல்லது மேலும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தலாமா என்றும் வினவினார். இந்நிலையில் அவர் டிஜிபி உள்ளிட்ட காவல் உயர் அதிகரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தற்போது இந்த ஆலோசனை ஊரடங்கை கடுமையாக்க்குவது குறித்து இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.