சபரிமலையில் குவியும் கட்டுக்கடங்காத கூட்டம்.. அதிரடி உத்தரவை பிறப்பித்த தேவஸ்தானம்!!

0
சபரிமலையில் குவியும் கட்டுக்கடங்காத கூட்டம்..

மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தளங்களில் ஒன்றான சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சிறப்பாக நடைபெறும். இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தரிசனம் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது வரும்  ஜனவரி 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் குறைந்த அளவிலான பக்தர்களுக்கு அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினத்தோறும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய மாற்றம்…, வெளியான முக்கிய அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here