தமிழகத்தில் செயல்பட்டு வரும் மகளிர் உரிமைத் திட்டத்தில், பயனாளிகள் தற்போது ஜனவரி மாத உரிமை தொகையை எதிர்நோக்கி உள்ளனர். இந்த திட்டதில், சுமார் 1.06 கோடி மகளிர் பயன்பெற்று வந்த நிலையில், 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். ஒவ்வொரு மாதம் திட்டத்தின் பயனாளர்களில், இறந்தவர்கள், தகுதி இல்லாதவர்களை மறு ஆய்வு செய்து திட்டத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்து வருகின்றனர். இந்த பணிக்கு 38 மாவட்டங்களிலும் ஒரு துணை வட்டாட்சியர்கள் நியமிக்க தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் செயல்பட்டு வரும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஆய்வு செய்யவும் சிறப்பு வட்டாட்சியர்கள் என 323 துணை வட்டாட்சியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பணிகளின் விவரம்:
38 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் துணை வட்டாட்சியர்கள்- 38
மண்டல துணை வட்டாட்சியர்கள் இல்லாத இடங்கள் – 7
புதிய வட்டங்களில் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர்கள் – 8
வருவாய் கோட்ட அளவில் துணை வட்டாட்சியர்கள் – 94
மக்கள் அதிகமுள்ள மாநகராட்சியில் துணை வட்டாட்சியர்கள் – 53
மகளிர் உரிமை தொகைத் திட்டத்தின் அதிக பயனாளிகள் உள்ள வட்டங்களில் துணை வட்டாட்சியர்கள் – 91
மலை-தொலை தூரப் பகுதியில் துணை வட்டாட்சியர்கள் – 32