நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அகவிலைப்படி குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அதன்படி மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு சமீபத்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அந்த வகையில் டெல்லியிலும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42ல் இருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
தற்போது இதைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் அரசு பள்ளி ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதாவது ஜனவரி மாதத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என அரசு ஆசிரியர் சங்கம் எல்ஜிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். எனவே இது குறித்து டெல்லி அரசு என்ன முடிவு எடுப்பார்கள் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.