கடலூர் ரசாயன ஆலை தீ விபத்து : 3 பேர் பலி !!!
கடலூரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் பாய்லர் வெடித்து 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
சிப்காட் பகுதியில்(கடலூர் மாவட்டத்தில்) பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. அந்த தொழிற்சாலையில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்ட்டுள்ளது. அந்த விபத்தில் பாய்லர் வெடித்து 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
விபத்து நடந்த சமயத்தில் அங்கு 100 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்த நிலையில் ரசாயன விபத்து நடந்துள்ளது. காப்பாற்ற நினைத்து சென்ற மக்களுக்கும் விபத்து காரணமாக கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு நிறுவனத்தின் அலட்சியமே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் காயப்பட்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.