சென்னை குரோம்பேட்டையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் உள்ள 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கடையை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடையை மூட உத்தரவு :
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது. இதனால், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், சென்னை குரோம்பேட்டையில் புகழ்பெற்ற சரவணா ஸ்டோர்ஸ் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் உள்ள 250 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்தக் கடையை இழுத்து மூடுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புகழ்பெற்ற கடையில், உள்ள 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த பயத்தில் உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்