பாலியல் துன்புறுத்தலில் இறந்த பள்ளி மாணவி – ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது குண்டர் சட்டம் போட்ட காவல் ஆணையர்!!

0

ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி அளித்த பாலியல் தொல்லையால் உயிரிழந்த கோவை பள்ளி மாணவி வழக்கில்,அந்த ஆசிரியரை குண்டர் சட்டத்தில் காவல் ஆணையர் சிறையில் தள்ளியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

பாலியல் சர்ச்சை :

கடந்த சில தினங்களுக்கு முன் கோவை மாவட்டத்தை சார்ந்த ஒரு தனியார் பள்ளி மாணவி தனது ஆசிரியர்,மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து,தற்கொலை செய்து கொண்டார். மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தொடர்புடைய ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் அந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் பள்ளி முதல்வர் மீராவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும்,உயிரிழந்த மாணவிக்கு அரசு சார்பில் 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால்,தொடர்ந்து விசாரணையில் வைக்கப்பட்ட குற்றவாளி ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில்,சம்பந்தப்பட்ட ஆசிரியர் மிதுன் மீது,குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு,தற்போது அவரை சிறையில் அடைக்குமாறு கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here