சுரங்க கிருமி நாசினி – திருப்பூர் கலெக்டரின் அசத்தல் ஐடியா..!

0

நாடெங்கிலும் கொரோனா பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே கிடக்கின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்படாத வண்ணம் சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது திருப்பூர் தென்னம்பாளைத்தில் ‘சுரங்க கிருமி நாசினி’ அமைத்து மாவட்ட நிர்வாகம் அசத்தி வருகிறது. அதனை தனது ட்விட்டர் பகுதியில் வெளியிட்டுள்ளார்.

திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய் கார்த்திகேயன் இன்று ட்விட்டரில் ஒரு வீடியோவை பதிவு செய்து, அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.அதாவது கொரோனா பரவுவதைத் தடுக்க ஒவ்வொருவரும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும், பொது இடங்களிலும் இதை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

3 மாத EMI கட்டவில்லை என்றால் இவ்வளவு பக்கவிளைவுகளா..? உஷாரா இருந்துக்கோங்க மக்களே..!

இதனால் காய்கறி வாங்கச் சென்றால், மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றால், ஆறு அடி அல்லது ஒரு மீட்டர் இடைவெளியில் பொது மக்கள் நின்று வாங்கி வருகின்றனர். கூட்ட நெரிசலில் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு பொருட்கள் வாங்குவதைத் தடுக்கவும், கொரோனா பரவுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் கை கழுவுவதற்கு சோப்பும் வைக்கப்பட்டுள்ளது.

சுரங்க கிருமி நாசினி

திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையத்தில் சந்தைக்கு வரும் மக்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதற்காக சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் மக்கள் கை கழுவிவிட்டு, அதன் பின்னர் இந்த சுரங்கத்திற்குள் நுழைய வேண்டும்.

அப்படி நுழையும்போது, சுரங்கத்திற்குள் ஸ்ப்ரே ஆகிக் கொண்டு இருக்கும் கிருமி நாசினி மக்கள் மீது பட்டு சுத்தப்படுத்தும். திருப்பூர் மாவட்ட கொரோனா தடுப்பு குழுவினரால் இந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உள்ளூர் மக்களிடமும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here