கொரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியா பல தடுப்பு முயற்சிகளை எடுத்து வருகின்றது.
இந்தியாவில் கொரோனா:
இந்தியாவில் கடந்த 12 மணி நேரத்தில் 547 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டது. இதனால் இன்று வெள்ளிகிழமை காலை வரை இந்தியாவில் 6412 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இந்தியாவில் 169ல் இருந்து 199 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு நாளில் மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். 46 பேரில் மகாராஷ்டிராவில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது,அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,380 பேரும், தமிழகத்தில் 834 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா முதலிடம்
கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது.. மகாராஷ்டிராவில் 1364,தமிழகத்தில் 834 பேருக்கும்,டெல்லியில் 720 பேருக்கும்,ராஜஸ்தானில் 463 பேருக்கும்,தெலுங்கானாவில் 442 பேருக்கும், கேரளாவில் 357 பேருக்கும் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |