அமெரிக்காவில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் கொரோனா அறிகுறிகள் இருந்தும் பள்ளிக்கு சென்று, தடுப்பூசி செலுத்தாமல், முகக்கவசம் அணியாமல் பாடம் நடத்தி கொரோனாவை ஆசிரியர் ஒருவர் பரப்பியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பரவலே தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக எழுந்துள்ளது. குறிப்பாக இந்த நோய்த்தொற்று பிற நோய் தொற்று போன்று இல்லாமல் அலை அலையாக பரவி வருகிறது. மேலும் இதற்கு தற்போது வரை சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசி மட்டுமே ஆயுதமாக இருந்து மக்களை காத்து வருகிறது.
இந்த நோய் காலத்தில் மருத்துவர், துப்புரவு தொழிலார்களின் பணி மிக முக்கியமானது. அதே சமயம் ஆசிரியர்களின் பணியும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனேனில் இந்த நோய் கிருமி பற்றி சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அவர்கள் தான். ஆனால் தற்போது அமெரிக்காவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பள்ளியின் ஆசிரியர் ஒருவருக்கு காய்ச்சல், இருமல், தலைவலி அலர்ஜி போன்ற அறிகுறிகள் இருந்துள்ளன. இவர் தடுப்பூசி வேறு போடவில்லை. மேலும் மாஸ்க் அணியாமல் பாடம் நடத்தியதாக தெரியவந்துள்ளது.
அந்த ஆசிரியைக்கு 3 நாட்களுக்குப் பின் கொரோனா உறுதியானது. தற்போது அந்த ஆசிரியையின் வகுப்பில் பயின்ற 12 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களிடமிருந்து அவர்களின் பெற்றோருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வேறு வகுப்பு மாணவர்கள் சிலருக்கு கொரோனா பரவியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா விழிப்புணர்வு இன்றி பள்ளி ஆசிரியை இவ்வாறு நடந்து கொண்டது பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்