மத்திய பிரதேசத்தின் ஷாஜாப்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மஞ்சுஷா விக்ராந்த் ராய் ஒரு காலணி கடைக்காரரை அறைந்தது இணையத்தில் கடும் வைரல் ஆகி வருகிறது.
கடைக்காரரை அறைந்த கலெக்டர்:
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலையின் பலி எண்ணிக்கையால் மாநில அரசுகள் தற்போது ஊரடங்கு விதிகளை கடுமையாக்கி வருகின்றன. கோவிட் -19 பரவுவதைத் தடுக்க மாநில அரசு வெளியிட்டுள்ள ‘கொரோனா ஊரடங்கு உத்தரவு’ அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக ராய் தனது குழுவுடன் வெளியே வந்தபோது இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அப்பொழுது நேரம் ஆகியும் கடை அடைக்காததால் ஆத்திரம் அடைந்த ஆட்சியர் கடை உரிமையாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் போது பொய் சொன்னதாக கூறி அறைந்தார். இதைத் தொடர்ந்து, போலீஸ்காரர் கடையிலிருந்து வெளியே வந்து அவரை அடிப்பதாக மிரட்டினார். பின்பு கடையை அடைக்குமாறு உத்தரவிட்டனர். அதன் பின்னரே அதிகாரிகள் வெளியேறினார், இது அனைத்தும் வீடியோ பதிவில் தெளிவாக உள்ளது.தற்போது இரந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
All the news are released instantly & they are easily understandable.