டெல்லி மாநிலத்தில் பிரசாந்த் விகாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி(20) ஒருவர் தனது காதலனுடன் காரில் ஒன்றாக இருந்த போது ஒரு நபர் அதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து அவர்களை பின் தொடர்ந்து சென்ற அந்த நபர், காதலியை வீட்டில் இறக்கிவிட்டு காதலன் சென்றுவிட்டான். அதன் பின் வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியிடம் அந்த நபர் எடுத்த வீடியோவை காட்டி மிரட்டியது மட்டுமல்லாமல் பாலியல் தொந்தரவும் கொடுத்து தப்பித்து ஓடியுள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனை தொடர்ந்து காதலனுக்கு போன் செய்து தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறை சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்ததில் ரவி சோலங்கி(25) என்பது தெரிய வந்தது. உடனே அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.