கிளப் அணிகளுக்கு இடையிலான தொடரில், அல் ஹிலால் அணியை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணி 5வது முறையாக கோப்பையை வென்று அசத்தி உள்ளது.
ரியல் மாட்ரிட்:
கத்தாரில் உலக கோப்பைக் கால்பந்து தொடர் முடிவடைந்ததை அடுத்து, கால்பந்து மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்து விட்டது. இதனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு பெயர்களில் லீக் தொடர்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில், பிரபலமான கிளப் அணிகளுக்கு இடையே லீக் தொடர் நடைபெற்றது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதில், ரியல் மாட்ரிட் மற்றும் அல் ஹிலால் அணிகளுக்கு இடையே இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியானது ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. இதில், வினி ஜேர் 13வது மற்றும் 69 வது நிமிடங்களிலும், ஃபெடரிகோ சாண்டியாகோ 18வது மற்றும் 58வது நிமிடங்களிலும் மற்றும் கரீம் பென்சிமா 54 வது நிமிடத்திலும் 5 கோல்கள் அடித்தனர்.
“இப்படி ஒரு சாதனையா?? எனக்கு இப்போ தான் தெரியும்”…, ரோஹித்தின் பளிச் பேட்டி!!
இதற்கிடையில், அல் ஹிலால் அணி சார்பாக, மௌசா மரேகா மற்றும் லூசியானோ வியட்டோ 26, 63 மற்றும் 79 ஆகிய நிமிடங்களில் 3 கோல்கள் அடித்தனர். இதனால், ஆட்ட நேர முடிவில், ரியல் மாட்ரிட் அணி 5-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், ரியல் மாட்ரிட் அணி 5 வது முறையாக கோப்பையை தட்டி சென்றது.