பொதுவாக மக்கள் தங்களின் முக்கிய பொழுதுபோக்காக சினிமாவுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து 2 ஆண்டுகள் திரையரங்குகள் அடைக்கப்பட்டிரு ந்தது. மேலும் இதன் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் அதன் கட்டணம் குறைக்கப்பட்டது.
இதன் காரணமாக புதுச்சேரி திரையரங்குகளின் உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் அவர்களின் மனுவை அரசு பரிசீலனை செய்துள்ளது. அந்த வகையில் முதல் வகுப்பு டிக்கெட் ரூ. 100 லிருந்து 130 ஆகவும், 2 ஆம் வகுப்பு டிக்கெட் ரூ. 75 லிருந்து ரூ. 100 ஆகவும், 3 ஆம் வகுப்பு டிக்கெட் ரூ. 50 லிருந்து ரூ.60 ஆகவும் உயர்ந்துள்ளது. இவ்வாறு 10 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை டிக்கெட்டின் விலை அதிகரித்துள்ளது. மேலும் இன்று முதல் சினிமா டிக்கெட்களின் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.