நாட்டில் மீண்டும் அமலாகும் பொது முடக்கம் – புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அச்சத்தில் பொதுமக்கள்!!

0
நாட்டில் மீண்டும் அமலாகும் பொது முடக்கம் - புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அச்சத்தில் பொதுமக்கள்!!
நாட்டில் மீண்டும் அமலாகும் பொது முடக்கம் - புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அச்சத்தில் பொதுமக்கள்!!

சீனாவின் பீஜிங் நகரில் தொடர்ந்து வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மே 28ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக, நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

 மீண்டும் கட்டுப்பாடுகள் :

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக,  கொரோனா வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் இந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தாலும், சீனா, பிரிட்டன் போன்ற பகுதிகளில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சீனாவின், பெய்ஜிங், சாங்சுன், ஜிலின் உள்ளிட்ட பல நகரங்களில் வைரஸ் பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

இந்தத் தொடர் பரவலை கட்டுப்படுத்த, சீனாவின் பீஜிங்கில் வருகிற மே 28ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள பொழுதுபோக்கு கூடங்கள், ஜிம்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பூங்காவில் 30 சதவீதம் பேர் மட்டுமே செல்ல அனுமதி என நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here