பாரம்பரியம் மிக்க பள்ளியில் 23 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் கைது!!

0

பாரம்பரியம் மிக்க கும்பகோணம் பள்ளியில் 23 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர் கைது:

கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் 150 ஆண்டுகள் பழமையான மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. மேலும், இது கணிதமேதை ராமானுஜம் உள்ளிட்ட பல்வேறு உலகப்புகழ்பெற்ற அறிஞர்களை உருவாக்கிய பெருமை மிக்க பள்ளி என்பது குறிப்பிடத் தகுந்தது.  இந்த பள்ளியில், வேலை பார்க்கும் கணித ஆசிரியர் தற்போது  கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதாவது, இங்கு கணித ஆசிரியராக பணிபுரியும்  சேகர் இந்த பள்ளியில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில், இங்கு படிக்கும் 23க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் இந்த சேகர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அடுத்து, இந்த மாணவிகள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை தங்களின் பெற்றோரிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.  இதனால், மாணவிகளின் பெற்றோர் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.

இதனால், பள்ளி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பெற்றோர்களுடன் சென்று எஸ்.பி ரவளி பிரியாவிடம், ஆசிரியர் சேகர் மீது புகார் அளித்துள்ளனர்.  இதில் தற்போது, எஸ்.பி உத்தரவிட்டதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஆசிரியர் சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  இது மட்டுமல்லாமல், இவர் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் இது போன்ற புகாரில் சிக்கி சஸ்பெண்ட் ஆகி இருந்தார் என்பது கவனிக்க தகுந்தது.  புகழ்பெற்ற இந்த பள்ளியில் தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here