இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ரயில் பயணிகளுக்கு, விரைவான பயணங்களை வழங்க “வந்தே பாரத்” ரயில் சேவையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை, தற்போது 100 வழித்தடங்களில் 102 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கோடை கால சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த கோடை கால சிறப்பு வந்தே பாரத் ரயில் சென்னை எக்மோரிலிருந்து தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் ரயில் நிலையத்தை சென்றடையும். அதன்படி ஏப்ரல் 19, 20, 21, 26, 27, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கி சூடு.. 2 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்!!